dinamalar.com may 2012

பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!

வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது. இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.

மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.

Read more: பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!

 
January 11, 2010

திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் சரோஜாதேவி

என்னுடன் நடிக்கும் கதாநாயக நடிகர்களின் நடிப்பை உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பேன். அதேபோல் திறமையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்வேன்’ என்று நடிகை சரோஜா தேவி கூறினார்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை பாராட்டி கர்நாடக கலாக்ஷேத்ரா அகாடமி சார்பில் பெங்களூரில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் அகாடமியின் தலைவர் நாகாபரணா, நடிகை ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாராட்டு விழாவில் நடிகை சரோஜாதேவி கூறியதாவது: நான் நடிக்க தொடங்கிய காலத்தில் சிபாரிசு எதுவும் கிடையாது. திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுபோல எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போது, எனது நடிப்பை பார்த்து மற்ற படங்களுக்கு தேர்வு செய்தனர். சிபாரிசு எதுவும் எனக்கு கிடையாது.

Read more: திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.... கடவுளைப் பற்றி எழுதிய பாடல்

காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிட்டுவேஷன்.

Read more: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....

எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்

ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.

Read more: எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்

Hindustantimes ( New Delhi, September 25, 2006)

Legendary actress Padmini passes away

Padmini Ramachandran, who was amongst the first heroines to make it big in the Tamil film industry, died of a heart attack in Chennai at 3 am Monday morning. She was 74. Born in Poojappura in Thiruvananthapuram, Kerala, on June 12, 1932, Padmini started learning classical dance at the age of four and at the age of ten,she had her arangettam or dance debut. Her entry into the film world was rather unexpected. The legendary dancer Uday Shanker, on seeing her dance performance invited her to act in the film he was making. Thus Padmini became the heroine of the Hindi film Kalpana and started a career in Movies spanning a period of over 40 years. The film garnered her a lot of appreciation. More so, because of her eclectic style and charismatic dance moves.

Padmini had two sisters, Lalitha and Ragini who were also dancers. The trio was popularly known as the “Travancore sisters”. Her first Tamil film Manamagal (1950), which was directed by N S Krishnan, was a huge hit. This was followed by Thooku Thooki, which saw the Travancore sisters dance to the song "Sundari Soundari." Her first movie with Shivaji Ganesan was Panam(1950). Panam was the beginning of a partnership that saw Sivaji and Padmini star together in 60 films.

Read more: Legendary actress Padmini passes away

News & Events List

News and events archief

Powered by mod LCA

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %